கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் தனியார் நாளிதழின் முயற்சியாக கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற முயற்சி துவங்கப்பட்டது.
இந்த முயற்சியின் படி தனியார் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகங்கள், அரசுத் துறைகள் மற்றும் காவல்துறை இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன்படி நகரின் குறிப்பிட்ட பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர். நகரங்களில் காணப்படும் முக்கிய பிரச்சனைகளான போக்குவரத்து நெரிசல், பாதசாரிகளுக்கான நடக்க இடம் இல்லாமல் போவது, சைக்கிளுக்கான குறைவான மதிப்பு மற்றும் காற்று மாசுபாடு போன்ற இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இம் முயற்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இப்போது குறைந் துள்ள நிலையில் வரும் ஞாயிறு முதல் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சி நிர் வாகத்தின் இந்த அறிவிப்பு குழந்தைகள் மற்றும் பெரியோர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆர்.எஸ். புரம் பகுதியிலுள்ள டி.பி. ரோட்டில், தலைமை தபால் அலு வலகம் முதல் மேக்ரிகார் சாலை வரையான பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல்துறை ஆணை யாளர் பாலகிருஷ்ணன் மாந கராட்சி ஆணையாளர் பிரதாப் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துணைத் தலை வர் முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை யில் குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர். குழந்தைகளோடு பெரியவர்களும் தங்கள் வயதை மறந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.