கோவை தெலுங்குபாளையத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா நடந்தது. இதில் கட்சியின் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் குளோரி ஜான்பிரிட்டோ கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புறநகர் மாவட்ட தலைவர் அந்தோனிசாமி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். விழாவில் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஆலீஸ், ஆல்பர்ட் தாசன், பூர்ணலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மாவட்ட மாநகர் தலைவர் முத்து செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.



