fbpx
Homeபிற செய்திகள்சனத்குமார் நதி, ராமக்கா ஏரியை தூர்வாரி மேம்படுத்த தருமபுரி பாமக வலியுறுத்தல்

சனத்குமார் நதி, ராமக்கா ஏரியை தூர்வாரி மேம்படுத்த தருமபுரி பாமக வலியுறுத்தல்

தருமபுரி நகர பாமக ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர்கள் வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர்தமிழன், மாவட்ட துணை தலைவர்கள் வே.முத்துகுமார், சி.சம்பத், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாநில செயற்குழு பி.இராமலிங்கம், நிர்வாக குழு க.நம்பிராஜன், முரளி, தகடூர் இரவி, பூபால், கே.எஸ்.சரவணன், ஆட்டோபாண்டியன், ராமன், கணேசன், முனிசிப்செல்வம், வெங்கடேசன், பிரபாகரன், பிரகாஷ், கௌரப்பன், சரவணன், குமரன், சக்திவேல், செந்தில்குமார், துரைராஜ், கிருபாகரன், கலீம், ரத்தினவேல்பாண்டியன், சானவாஸ், அங்கப்பன், குமார், தினேஷ், நந்தகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. நடைபெற இருக்கின்ற நகராட்சி தேர்தலில் கடுமையாக உழைத்து அதிக அளவிலான பாட்டாளி மக்கள் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களை தருமபுரி நகராட்சியில் வெற்றி பெற செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
  2. தருமபுரி நகராட்சியில் அமைந்துள்ள ராமக்கா ஏரியை தூர்வாரி, முட்செடிகளை அகற்றி, மேம்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. தருமபுரி நகர பகுதியில் சனத்குமார் நதி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றினை தூர்வாரி, கழிவுநீர் கலக்காத வண்ணம் வழிவகை செய்வதோடு, கரை ஓரங்களிலுள்ள முள்செடிகளை அகற்றி மேம்படுத்திட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img