Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூரில் விவசாய தோட்டத்தில் நுழைந்து பத்துமாத கன்றுகுட்டியை தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மேல்பவி, நீலம்பதி,ஆதி மாதையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான இங்கு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது

இந்த நிலையில் ஆதிமாதையனூர் கிராமத்தினை சேர்ந்த ஆனந்தன் என்பவர் பசுமாடுகள் வளர்த்து வரும் நிலையில் நேற்று இரவு இவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று அவர் வளர்த்து வந்த பத்து மாத கன்று குட்டியை தாக்கி தூக்கி சென்றுள்ளது

கன்றின் அலறல் சப்தம் கேட்டு கிராம மக்கள் சிலர் சிறுத்தையை துரத்திச் சென்று உள்ளனர் சிறிது தூரம் சென்று அந்த சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது இதுகுறித்து காரமடை வனத் துறையினரிடம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அதன் கால்தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்புகளுக்குள் வரும் சிறுத்தையை வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img