தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், வத்தல் மலையில் பழங்குடியினருக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



