தர்மபுரி வள்ளல் அதியமான் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 3228 பயனாளிகளுக்கு ரூ.30.82 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக 156 பயனாளிகளுக்கு ரூ.94.90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் கோட்டாட்சியர் முத்தையன், தனி துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



