கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேய்க்கால் நிலங்களை புனரமைப்பு செய்து தீவன பயிர் சாகுபடி செய்வது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராகவன், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



