முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், முதன்மைச் செயலாளர்/வணிகவரி ஆணையர், பதிவுத்துறை தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



