தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் காணொலி வாயிலர்க நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்பு தலைவர் டாக்டர்.பி.பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.வெ.பெரியதுரை, மாநில பொருளாளர் டாக்டர்.கே.தமிழ்செல்வன், மாநில செயல் தலைவர் ஆர்.சீனிவாசன், மாநில செயலாளர் ராஜா.சுரேஷ், தலைமை நிலைய செயலாளர் டாக்டர்.கே.எஸ்.முகம்மதுரஹீம்முதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் சங்கம் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா தொற்று மூலம் பாதித்த மக்களுக்கு உதவிடும் வண்ணம் எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அரசாணை 525&ல் திருத்தம் செய்து உடற்கல்வி துறை மறுமலர்ச்சி பெற ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் நியமனம் மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு உடற்கல்வி இயக்குநர் நியமனம், கல்வி மாவட்டத்திற்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம், வருவாய் மாவட்டத்திற்கு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடமும், மாநில அளவில் இணை இயக்குநர் (உடற்கல்வி) பணியிடமும் வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வி பயிலும் அனைத்து மாணவ&மாணவிகளுக்கும் விலையில்லா உடற்கல்வி புத்தகம், விளையாட்டு உபகரணம் வழங்க வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நவீன காலத்திற்கேற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நுட்பங்களை அறிந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஏற்ப விளையாட்டு பல்கலைக்கழகம் மூலமாக கோடை கால படிப்பு (B.PED., M.PED., M.Phil.,) உடனடியாக துவங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களை, பள்ளிகல்வி துறையில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தங்களுக்கும் வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக மாநில செய்தி தொடர்பாளர் என்.பால்ராஜ் நன்றி கூறினார்.