மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நாகர்கோவில் மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் கிளை சார்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தினசரி கூலி தொழிலாளர்கள் 550 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் (5,50,000) ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் ஆஷா அஜித், நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர்,கின்சால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், கொட்டாரம் வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, அன்னை நகர் ஊராட்சி தலைவர் அந்தோணி, வார்டு உறுப்பினர் சூசை நாயகம், சமூக ஆர்வலர்அந்தோணி பிரேமன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வில் மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் நாகர்கோயில் கிளை தலைவர் ரினித், துணை தலைவர் மார்ட்டின் பாபு, வர்த்தக மேலாளர் துவாரகநாத், விற்பனை மேலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.