தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி அருகே வனப்பகுதியில் மையப்பகுதியில் 6 கிராமங் கள் உள்ளது.
கிராமத்தில் குடிநீர், சாலை, மின்சார வசதி கோரி கிராம மக்கள் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித் தனர்.
சட்டபேரவை உறுப்பினர் வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மலை கிராமத்தை பார்வையிட்டார்.
இங்குள்ள பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அடிப்படைவசதி இல் லாததால் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மலை பகுதியில்இருந்து வெளியேறி விட்டனர்.
தற்போது வாழ்ந்து வரும் மக்கள் விவசாயத்திற்கு டிராக்டர் கொண்டுவர வனப்பகுதி இடம் அனுமதி பெற்று தரவேண்டும் என்றும் சாலை மின்சாரம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என நேரில் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பேசிய தர்மபுரி சட்டப்பே ரவை உறுப்பினர் எஸ். பி.வெங்கடேஸ்வரன். மிட்டரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை பகுதியில் ஒட்டன் கொல்லை, கொஜமான் சட்டை, வாழை மரத்து குட்டை, பையன் குட்டை, மல்லன் குட்டை உள்ளிட்ட 6 கிராமங்கள் உள்ளது மூன்று தலைமுறைகளாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதியில் நூற் றுக்கும் மேற்பட்ட பட்டாதாரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
60க்கும் மேற்பட்ட வீடுகளில் நூற் றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
சாலை வசதி குடிநீர் வசதி மின் வசதி இல்லாததால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மலையின் கீழ்ப்பகுதி உள்ள கிராம பகுதிக்கு சென்றுவிட்டனர்.
மக்கள் மண்ணெண்ணெய் விளக்கில் வாழ்ந்து வருகிறார்கள் குடிநீர் வசதிக்காக 2 குட்டைகள் உள்ளது குட்டையில் இருந்து தண்ணீர் எடுத்துக்குடிப்பதற்கு பயன் படுத்தி வருகின்றனர்.
மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை மட்டுமே மக்கள் குடித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் விவசாய பணிகள் மேற்கொள்ள டிராக்டர் மலைப் பகுதிக்கு கொண்டு செல்ல மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத் துறை அமைச்சரிடம் பேசி இப்பகுதி மக்கள் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் அனைத்து வீடுகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சோலார் மின்விளக்கு குடிநீர் வசதிக்காக சோலார் மூலம் மின் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.