fbpx
Homeபிற செய்திகள்தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கோவை மாநகர் மேற்கு மாவட்டம் மணியகாரன்பாளையம் பகுதி திமுக சார்பில் 20வது வட்டம் கணபதி கேஆர்ஜி நகரில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சமூக நீதி நாள் விழா இன்று நடைபெற்றது.

கணபதி – சத்தி சாலை பிஎஸ்என்எல் முன்பு தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மேயர் கல்பனா ஆனந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொண்டர் களுடன் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். விழாவுக்கு 20வது வட்ட மாமன்ற உறுப்பினர் அ.மரியராஜ் தலைமை தாங்கி, பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பகுதி திமுக பொருளாளர்.ஆர்.எஸ். சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேஆர்ஜி நகர் பொறுப்பாளர் சு.செந்தில்குமார் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் பகுதி திமுக உறுப்பினர் பன்னீர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img