தென்னிந்திய அளவிலான மாணவ, மாணவிகளுக்கான, ரோல் பால் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள், புதுச்சேரியில், ரோல் பால் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில் உள்விளையாட்டு அரங்கில் நடந்தன.
கோவை கணபதியில் உள்ள கேம்ஃப் போர்ட் சர்வதேச பள்ளி மாணவர்கள் தமிழக அணியில் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
பெண்கள் பிரிவில், தமிழக அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. மாணவர்கள் பிரிவில் தமிழக அணி ரன்னர்ஸ் விருதை பெற்றது.
இந்த போட்டிகளில், 8-ம் வகுப்பு மாணவி ராஜஸ்ரீ ஸ்ரீதர், 8-ம் வகுப்பு மாணவர்கள் கே.ரிஷப், கே. நித்தின், 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீசுதர்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
தமிழக அணியில் பங்கேற்று வென்ற கேம்ஃபோர்டியா மாணவர்களை பள்ளித் தலைவர் அருள்ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம்சையல் ஆகியோர் வாழ்த்தினர்.



