திருவண்ணாமலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 7.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அருகில் கலெக்டர் சந்தீப்நந்தூரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஜோதி ஆகியோர் உள்ளனர்.