fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் ஊரடங்கு: ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கும் இன்னர்விசன் தொண்டு நிறுவனம்

மேட்டுப்பாளையத்தில் ஊரடங்கு: ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கும் இன்னர்விசன் தொண்டு நிறுவனம்

இன்னர் விஷன் தொண்டு நிறுவனம், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் சேவைகள் செய்து வருகிறது.


தமிழகத்தில் கோவையை மண்டல மையமாக கொண்டு செயல்படுகிறது. இது அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் பல்வேறு உதவிகள் மற்றும் உபகரணங்கள் மாதம் தோறும் வழங்கி வருகிறது.


இலவசமாக பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பல தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது, மேட்டுப்பாளையம் பகுதியில் இலவச கண் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தற்போது 1 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊரடங்கு கால கட்டத்தில் மதிய உணவு விநியோகம் செய்யும் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னர் விஷன் தொண்டு நிறுவனத்துடன் நமது மேட்டுப்பாளையம் குழு உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள், 108 அவசர ஊர்தி பணியாளர்கள், வெளி மாவட்ட தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் சாரையோரம் வசிப்போர், மருத்துவமனை வெளி நோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர், பேருந்து நிலையம் அன்பு மேடை பொதுமக்கள் உட்பட சுமார் 250 பேருக்கு இன்னர் விஷன் மண்டலத் தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் மற்றும் மேட்டுப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் மஸ்தான் ஆகியோர் மதிய உணவுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.


தொடர்ந்து 10 நாட்கள் இச்சேவை நீடிக்கும் , என மண்டலத் தலைவர்கள் டாக்டர் அரவிந்த் கார்த்திகே யன், லதா ஆகியோர் தெரி வித்தனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயராமன் வாழ்த்திப் பேசினார். நமது மேட்டுப் பாளையம் குழுவினர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img