fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை: காய்கறி மார்க்கெட், உருளைகிழங்கு மண்டிகள் விரைவில் திறக்க நடவடிக்கை

மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை: காய்கறி மார்க்கெட், உருளைகிழங்கு மண்டிகள் விரைவில் திறக்க நடவடிக்கை

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று பெள்ளாதி அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மற்றும் உருளை கிழங்கு மண்டி ஏற்கனவே செயல்பட்டு வந்த காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை கட்டுப்பாட்டுகளுடன் திறப்பது குறித்து வியாபாரிகளுடனான ஆலோசனை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்தி ரன், துணை இயக்குநர் (தோட் டக்கலைத்துறை) புவனேஷ்வரி, மற்றும் காய்கறி உருளைக் கிழங்கு மண்டி வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்க ளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது.

மேலும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், மேட்டுப் பாளையம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த காந்தி மைதானம் காய்கறி மார்க்கெட் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக பெள்ளாதி அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து விதமான வேளாண் பொருட்களை பாதுகாப்பது மற்றும் விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படுவதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரபெற்றது.

அதனைத்தொடர்ந்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி,
· காந்தி காய்கறி மார்க் கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும், Hand sanitizer வைக்க வேண்டும்;,
· வியாபாரிகள், பணியா ளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.
· 50சதவீதம் கடைகள் மட்டும் திறக்கவேண்டும். மேலும், 50சதவீத பணியாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கவேண்டும்.
· வியாபாரிகள், பணி யாளர்கள் அனைவரும் கட்டா யம் அடையாள அட்டை அணி யவேண்டும்.
· வியாபாரிகள், பணி யாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
·அதன்படி, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் திறக்க முதலமைச்சரின் கவனத் திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img