fbpx
Homeபிற செய்திகள்முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளருக்கான சிறப்பு தடுப்பூசி முகாமில் அமைச்சர்கள்

முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளருக்கான சிறப்பு தடுப்பூசி முகாமில் அமைச்சர்கள்

முதலமைச்சர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரை முன்களப் பணியாளர்கள் என்று அறிவித்ததை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் அம்பலவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img