கட்டட கட்டுமான மூலப் பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கட்டுமான பொறி யாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு பாண் டிச்சேரி கட்டிடப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆர். மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா எனும் கொடூரமான தொற்றுநோய் நாட்டையே உலுக்கி வருகிறது.
இதனால் கடந்த ஆண்டுபாதிக் கப்பட்ட தொழில்கள் இன்று வரை ஸ்திரத்தன்மையை அடைய வில்லை. அதற்குள் மீண்டும் கொரோனா தொற்று நோய் தீவிரம் அடைந்து மீண்டும் ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால், அனைத்து தொழில்க ளுமே முடங்கிப் போயுள்ளது. இந்நிலையில், கட்டிடப் பொருட் களின் விலை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந் துள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 340 க்கு விற்கப்பட்ட சிமெண்ட் இப்போது 520 ரூபாயாக உயர்ந்துள்ளது. கம்பி ஒரு டன் 58 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது
தற்போது 72 ஆயிரத்திற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் செங்கல் கொண்ட ஒரு லோடு 23 ஆயிரம் ரூபாய்க்கு கடந்தாண்டு விற்கப்பட்டது.தற்போது 27 ஆயிரம் ரூபாய்க்கு விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜல்லி ஒரு யூனிட் 3500 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.மணல் ஒரு லோடு 3800 ரூபாயி லிருந்து 5,000 ரூபாய் ஆக விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று பெயிண்ட் வகைகள் 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை கூடுதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கட்டிட பொருட்களின் விலை 25சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு கட்டிடப் பொருட்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயரவில்லை. இருப்பி னும் செயற்கையாக கட்டிடப் பொருட் களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கட்டிட வேலை முழுவ துமாக முடங்கிப்போய் உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உள்ள நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த சுமார் 15 இலட்சம் வட நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். இங்கே கட்டிட தொழில் செய்வதற்கு தொழிலாளர்கள் தட்டுப்பாட்டில் உள்ளனர்.
கட்டுமானத்துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறி யாளர்கள் கட்டுநர்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள பணியினை செய்து முடிப்பதற்கு முடியாத நிலையில் உள்ளனர்.கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான துறையில் பணிபுரியும் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் 10ஆயிரம் கட்டுநர்கள் 15ஆயிரம் பொறியாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.மேலும் முதல்வர் விவசாய தொழிலுக்கு இணை யான கட்டுமானத் தொழிலில் உள்ள நெருக்கடி நிலையை போக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
கட்டுமானத்துறைக்கு என்று தனியாக ஒரு அமைச்சரை நியமிக்கவேண்டும். கட்டுமானத் துறைக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் செயற்கையாக விலையேற்றம் செய்யும் கட்டு மான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.