கோவை வடவள்ளி பகுதியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் இந்தியாவில் உள்ள மருத்துவர்களைப் பாதுகாக்க தேசிய அளவிலான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரி, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ரவிக்குமார், செயலாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் ரவிக்குமார் கூறியதாவது:
இந்தியாவில் சமீப காலமாக மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பலத்த காயம் அடைந்தும் சிலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவப் பணிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே தேசிய அளவிலான மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் நோய்தொற்று காலத்தில் உயிரை பொருட் படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்களை தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசு கவனத்தில் கொண்டு மருத்துவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோயாளிகளின் உறவினர்கள் அத்துமீறிய செயல்களை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான மருத்துவர்களுக்கு பாது காப்பு சட்டத்தை உடன டியாக நிறைவேற்ற வேண் டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.