கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தொடக் கத்தில் 4 லட்சமாக இருந்த ஒரு நாள் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 817 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந் தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும், கட்டாயமும் ஒன்றிய அரசுக்கு உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.
இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12ன் படி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்.டி.எம்.ஏ. வின் கடமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு
மேலும் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.