இன்று (ஜூன் 21) உலக யோகா தினம் ஆகும். இது இன்று காலை 7 மணிமுதல் 8 மணிவரை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தற்சமயம் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு யோகா தினத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையொட்டி புனித அந்தோணியார் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்சாண்டர் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வாட்ஸ்அப் வழியாக யோகா குறித்த விழிப்புணர்வுகளையும், செயல்முறை விளக்கங்களையும் வீடியோ மூலம் அனுப்பி மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் பாதுகாப்பாக இருந்து யோகா செய்து அதன் புகைபடத்தை அனுப்பிவைக்க மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
தேசிய மாணவர் படையின் மாணவர்கள் சுமார் 70 பேர் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் 20 பேர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு பத்மாசனம் , சிரசாசனம், சர்வாங்காசனம் ,ஏக பாதாசனம் , மயூராசனம் ,புஜங்காசனம் ,யோக முத்ரா , சலபாசனம் , தனுராசனம் , திரிகோண ஆசனம் , மச்சாசனம் , விபரீதகரணிஆசனம் , ஹலாசனம் , சக்கராசனம், பஸ்சிமோத்தானாசனம், மத்ஸ்யாசனம் , வஜ்ராசனம் போன்ற ஆசனங்களை செய்தனர்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்சாண்டர் செய்திருந்தார்.