fbpx
Homeபிற செய்திகள்பாஜக இரட்டை வேடம் போடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பாஜக இரட்டை வேடம் போடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக மாணவர்களின் நலன் கருதியே திமுக அரசு, நீட் தேர்வு குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது.

ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குத் தொடுத்துள்ளது. பாஜக இரட்டை வேடம் போடுகிறது.

இது தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டி புதைக்கிற வகையில் உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பாஜக இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளது தெரிகிறது. சட்டப்பேரவையில் ஆதரவாகவும், வெளியில் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வு குறித்த தெளிவான முடிவினை அவர்கள் அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img