கோவை, சின்னாம் பதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அப்பகு தியைச் சேர்ந்த பழங்குடியின பட்டதாரிப் பெண் ணுக்கு புத்தகம் பரிசாக வழங்கினார்.
மதுக்கரை வட்டாரத் துக்குட்பட்ட பழங்குடியின கிராமங்களான சின்னாம்பதி, புதுப்பதி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை ஆட் சியர் ஜி.எஸ்.சமீரன் சனிக்கிழமை ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது சின்னாம்பதியைச் சேர்ந்த பி.காம் (சி.ஏ) பட்ட தாரிப் பெண்ணான சந்தியா பழங்குடியின மாணவர்களுக்கு குடியிருப்பிலேயே பாடம் நடத்தி வருவதை கேள்விப்பட்ட ஆட்சியர் அப்பெண்ணை சந்தித்து புத்தகம் பரிசளித்தார்.
கொரோனா தொற்று நிலையில் வாய்ப்பற்ற ஏழை பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்றும் பாராட்டினார்.
தொடர்ந்து ஆட்சியர் வாளையாறு சோதனைத் சாவடி உள்பட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பயிற்சி ஆட்சியர் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் உள்பட அதிகாரிகள் உடனி ருந்தனர்.