தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் அலகில் இருந்து 52.720 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜா தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக் ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று (ஜூலை 7) மாலை நிலவரப்படி 52.270 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11.960 மெ.டன், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 7 மெ.டன், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2.480 மெ.டன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 9 மெ.டன், திருச்சி அரசு மருத்துவமனைக்கு 6.180 மெ.டன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 9 மெ.டன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 7.100 மெ.டன் என மொத்தம் 52.720 மெ.டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜா தெரி வித்துள்ளார்.