கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி யாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக தீபக் தமோர் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா நோய் பரவல் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடாமல் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. பொதுமக்கள் அவசியம் இன்றி எந்தவித தேவையும் இல்லாமல் பொது இடங்களில் சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும். போலீசார் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விதிமுறை மீறலில் ஈடுபடு வோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
தேவைப்படும் இடத்தில் அறிவுரையும் கூறப்படும். நோய் பரவலை தவிர்க்க போலீசாருடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள், ஒரு வார காலத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேவையின்றி வெளியே வரக்கூடாது.
அருகில் உள்ள மளிகை, காய்கறி கடைகளுக்கு நடந்து செல்ல வேண்டும். கொரோனா பரவல் தடுக்க எல்லோருடைய ஒத்துழைப்பும் மிக அவசியம். இவ்வாறு கமிஷனர் தீபக் தமோர் கூறினார்.