fbpx
Homeபிற செய்திகள்துன்பத்திற்கும், வேதனைக்கும் உரியதாக மாறி விட்டது அறிவியலின் அதீத வளர்ச்சி- கௌமார மடாலய சிரவை ஆதீனத்...

துன்பத்திற்கும், வேதனைக்கும் உரியதாக மாறி விட்டது அறிவியலின் அதீத வளர்ச்சி- கௌமார மடாலய சிரவை ஆதீனத் தலைவர் ஆதங்கம்

அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தோற் றுவிக்கின்றன. ஆனால், அதே அறிவியலின் அதீத வளர்ச்சி துன்பத்திற்கும், வேதனைக்கும் உரியதாக மாறிவிட்டது என்று கௌமார மடாலயத்தில் சிரவை ஆதீனத் தலைவர் முனைவர் குமரகுருபர சுவாமிகள் பேசினார்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், நேற்று (ஏப்.22) விளக்கேற்றும் விழா தொடங்கியது.

இசைத்துறை உதவிப் பேராசிரியர் ஜே.ஆர்.பிந்து இறை வணக்கம் பாடினார்.
இவ்விழா இந்தியாவின் கலாச் சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக மாணவிகள் அஞ்ஞான இருளிலிருந்து மெய்ஞ்ஞான வெளிச்சத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது.

கலை மற்றும் சமூக அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் எம்.மனோன்மணி வரவேற்றார். ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி பேசும்போது, எண்ணங் களை உயர்வாக கொண்டு விடா முயற்சியோடு உழைப்பீர்களானால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.

உங்கள் அனைவருக்கும் ஒளியூட்டிய தாய் விளக்குதான் நீங்கள்.
இதுவரை கல்வி பயின்ற நமது கல்வி நிறுவனம் அந்தத் தாய் விளக்கின் பெருமையை மேலும் உயர்த்த, அதன் ஒளி மென்மேலும் ஒளிர, அதிலிருந்து நீங்கள் பெற்ற அறிவு உலகிற்குப் பயன்பட, இனி நீங்கள் அடி எடுத்து வைக்கக்கூடிய எதிர்கால இலக்குகளில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

சிறப்பு விருந்தினர் கௌமார மடாலயத்தின் சிரவை ஆதீனத் தலைவர் முனைவர் குமரகுருபர சுவாமிகள், தாய் விளக்கை ஏற்றி சிறப்பித்தார்.

அவரது ஆசியுரையில், ஆத்திச்சூடியில் இளமையில் கல் என்று ஔவைப் பிராட்டி பல அற நெறிகளைச் சொல்லி உள்ளார். அதில் இருந்து மாறிய காரணத்தினால் இன்றைய உலகம் தடம் புரண்டு செல்கிறது. நல்ல பண்பாடு, கலாச்சாரம், அறவழியில் செல்லும்போது, நம்நாடு உயர்ந்த நிலையை அடைய முடியும்.

பெண் கல்வி கற்றால், அச்சமுதாயமே கல்வி அறிவு பெற முடியும். கற்பதை நிறுத்திக் கொண்டால், வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கின்றன.

ஆனால், அதே அறிவியலின் அதீத வளர்ச்சி துன்பத்திற்கும், வேத னைக்கும் உரியதாக மாறிவிட்டது. இம்மண்ணில் ஆன்மீகம் சார்ந்த கல்வி உள்ளது. அதுதான் நம் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

இறுதியாண்டு பயிலும் இள நிலை, முதுநிலை மாணவிகள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி மற்றும் முனைவர் பட்ட மாணவிகள் மொத்தம் 2,763 பேர் விளக்கேற்றினர்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தின் வேந்தர் டாக்டர் ச.ப.தியாகராஜன், உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் தீபம் ஏந்தி உறுதி எடுத்துக் கொண்டனர்.

தமிழ்த்துறை உதவிப் பேராசி ரியர் முனைவர் ச.பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img