திருப்பூர் மாவட்ட வடக்கு மாநகர எட்டாவது வார்டு பகுதி பொதுமக்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியை மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.செல்வராஜிடம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எம்.எம்.டி.காந்தி ஏற்பாட்டில் வார்டு செயலாளர் சி.வெள்ளைச்சாமி முன்னிலையில் நூறுக்கும் மேற்பட்ட வங்கி காசோலைகளை (மொத்தம் ரூ.1,89,700) வழங்கினர்.
உடன் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மேங்கோ பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி, பாண்டியன் நகர் பகுதி கழக செயலாளர் வெ.ஜோதி மற்றும் நிர்வாகிகள் எம்.எஸ்.ஆர்,ராஜ், மகேந்திரன், கேபிள்ராஜ், கோபால்சாமி, ஆறுமுகம், சில்வர் சரவணன் மற்றும் கணேசன், ராக்போர்ட் சுதாகர், விஜய், பூபதி, ரஜினி, முகமதுரபீக், உதயகுமார், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.