fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு: விலை குறைப்பால் பயனடைந்த பயனாளிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...

திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு: விலை குறைப்பால் பயனடைந்த பயனாளிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி

திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பினால் 9 சதவீதம் ஆவின் பால் விற்பனை அளவு உயர்ந்து 6.56 லட்சம் லிட்டர் ஆவின்பால் ரூ.2.16 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்தில், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகைளில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொது மக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

அதன்படி, கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்கள்.மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்கள்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் அளித்துள்ளார்கள்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி அவர்கள் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் கடந்த 16.5.2021 முதல் லிட்டர் ஒன்றிக்கு ரூ.3 குறைக்கப்பட்டு, நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலையானது ரூ.44.00 ஆகவும், நிறைகொழுப்பு பால் லிட்டர் ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலையானது ரூ.48.00 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மே 16ம் தேதி முதல் 16.6.2021 வரை நிலைப்படுத்தப்பட்ட பால் 250 மிலி பாக்கெட் 1,08,884 லிட்டர் அளவும், 500 மிலி பாக்கெட் 1,25,317 லிட்டர் அளவும், நிறைகொழுப்பு பால் 500 மிலி பாக்கெட் 2,35,984 லிட்டர் அளவும் மற்றும் 1 லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட் 18,279 லிட்டரும் என மொத்தம் ரூ.2.16 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு, 9 சதவீதம் ஆவின் பால் விற்பனை அளவு உயர்ந்து உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

இதற்காக பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த ருக்மணி, தெரிவித்ததாவது:
எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3- குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, முதலில் ஒரு லிட்டர் பால் ஒன்றிக்கு ரூ.47 கொடுத்து வாங்கி வந்தேன். கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவினால் எனது கணவருக்கு போதிய வருமானம் இல்லாத சூழலில் ஆவின் பாலின் விலையை ரூ.3- குறைத்ததினால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ஏற்படும் குடும்ப செலவு கணிசமாக குறைந்து உள்ளது.

இதனால் எங்களால் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கூடிய சத்தான சுத்தமான ஆவின் பாலை வாங்கி எங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடிகிறது.

ஆவின் பால் லிட்டர் விலையை ரூ.3- குறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி தொஜீவித்தாவது:
குடும்பத்தினருடன் தென்னம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

எங்களுக்கு இரு மகள்கள் மற்றும் எனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறேன். கூட்டு குடும்பமாக உள்ளதால் தினசரி பாலின் தேவை அளவு அதிகமாகி, எனக்கு மாதந்தோறும் ஏற்படும் குடும்ப செலவு உயர்ந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3- குறைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, முதலில் ஒரு லிட்டர் பால் ஒன்றிக்கு ரூ.47 இருந்ததால் தினசரி ஒன்றரை லிட்டர் பால் வாங்கி பயன்படுத்தி வந்தேன்.

ஆவின் பாலின் விலையை ரூ.3- குறைத்ததினால் தற்பொழுது தினசரி இரண்டு லிட்டர் பால் வாங்கி வருகிறேன். இதனால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ஏற்படும் குடும்ப செலவு சற்று குறைந்து உள்ளது.

நான் தற்போது குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கூடிய சத்தான சுத்தமான ஆவின்பாலை வாங்கி என்னுடைய குடும்பத்தினருக்கு கொடுத்து அவர்களுடைய உடல்நலனை மேம்படுத்த முடிகிறது.

ஆவின் பால் லிட்டர் விலையை ரூ.3- குறைந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

படிக்க வேண்டும்

spot_img