திருப்பூர் மாநகராட்சி 29வது வட்டத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் 25 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் நேற்று வழங்கினார். நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் க.ஈஸ்வரமூர்த்தி, டிஜிட்டல் சேகர், சிட்டி கணேசன், ராமசாமி, மகாலட்சுமி, வட்டக் கழக செயலாளர் தம்பி சுகுமார், பகுதிக் கழக பொருளாளர் ஜெய்சங்கர், பகுதி வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.