தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.
தர்மபுரி நகராட்சி பகுதிகளில் கொரோனா தோற்று அதிகமாக பரவி வருகிறது. அனைத்து வார்டுகளில் நகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்து அடிக்கும் பணி வேண்டுமென்று தர்மபுரி பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தியுடன் நடத்திய ஆலோசனையில் கேட்டுக் கொண்டார்.
அப்போது அவரிடம் தினந்தோறும் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்தடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா இருக்கும் மக்களை தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் வீட்டுக்கு முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது என்று நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தி விளக்கம் அளித்தார்.
அப்போது பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி தர்மபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, டி.ஜி.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.