தருமபுரி நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரப்படும் சிகிச்சைகள் குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறதா என கேட்டறிந்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்குமார், மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் தகடூர் தமிழன் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.