fbpx
Homeபிற செய்திகள்சென்னை போர்டிஸ் மருத்துவமனையில் திரை பிரபலங்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் - விழிப்புணர்வு

சென்னை போர்டிஸ் மருத்துவமனையில் திரை பிரபலங்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் – விழிப்புணர்வு

ரத்த தானம் செய்யும் நன்கொடையாளர்களை ஊக்குவிக்கவும் அது குறித்த கட்டுக்கதைகள் மற்றும் சந்தேகங்களை அகற்றுவதற்கும் சினிமா பிரபலங்களான அஞ்சலி ராவ் (நடிகை), பிரவீன் சரவணன் (தயாரிப்பாளர்), சுரேஷ் ரவி (நடிகர், தயாரிப்பாளர்), ரஞ்சித் மணிகண்டன் (திரைப்பட இயக்குனர்) மற்றும் மரு. சஞ்சய் பாண்டே (மண்டல இயக்குனர், ஃபோர்டிஸ்) உடன் இணைந்து போர்டிஸ் மருத்துவமனை ரத்த தான முகாமை நடத்தியது

இந்நிகழ்ச்சியில் போர்டிஸ் மருத்துவமனையின் மண்டல இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாண்டே கூறியதாவது: கொரோனா நாட்டிலுள்ள ரத்த வங்கிகளின் ரத்த இருப்பை பாதித்துள்ளது. தன்னார்வ ரத்த தானம் செய்தல் மற்றும் தேசிய ரத்த விநியோகத்தை பாதித்துள்ளது.

மேலும் தொற்றுநோய் காலத்தில் மாநிலத்தின் ரத்த தான இயக்கம் 20 சதவீதம் சரிந்துள்ளது. எந்தவொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் இரத்த மாற்றுத் தேவையை பூர்த்தி செய்ய அதன் மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் ரத்த தானம் செய்ய வேண்டும்.

இந்தியாவில், எப்போதும் 1 மில்லியன் ரத்த யூனிட் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை அகற்ற, இந்தியாவின் இளைஞர்களை ரத்த தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் தனது தனிமைப்படுத்தப்பட்ட அல்லது சிகிச்சைக்கு பிந்தைய 28 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். தடுப்பூசி போட்ட நபர் தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்குப் பிறகு ரத்ததானம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போர்டிஸ் மருத்துவமனையின் ரத்த மாற்று மருத்துவ ஆலோசகர் டாக்டர் சண்முக பிரியா கூறுகையில், “இரண்டாவது அலையின் போது கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அறுவை சிகிச்சைகளுக்கான ரத்தத்தின் தேவையும் குறையவில்லை.
சாலை விபத்துகள் குறைந்து இருந்தாலும் கர்ப்பிணிப் பெண்கள், தலசீமியா மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு ரத்தம் தேவை இருக்கத்தான் செய்கிறது` என்றார்.

படிக்க வேண்டும்

spot_img