தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராசர் சாலையில் உள்ள ஜெயலலிதா வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.