சென்னை பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல் செய்கின்றனர். 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையில் சிவசங்கர் பாபாவின் 2 பெண் பக்தர்களை சிபிசிஐடி போலீசார் தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.