சர்வதேச அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் புதிய தொழில் முனைவோரை கண்டறிந்து அவர் கள் முன்னேற அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டை பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் இளம் தொழில் முனைவோருக்கான போட்டி களை நடத்தி வருகிறது.
உலக அளவில் 7 நாடுகளை சேர்ந்த பல்வேறு கல்லூரி மற்றும் பல்க லைக்கழகங்களை சேர்ந்த 1600க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் கோவை கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடவியல் துறையைச் சேர்ந்த பயோனியர் குழு அரையிறுதிக்கு தேர்வாகி ரொக்கப் பரிசை வென்றது.
27 அணிகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டட வியல் துறை பேராசி ரியை மீனாட் சியின் வழிகாட்டுதலில் பள்ளி மாணவர்களின் சுகா தார மேம்பாட்டுக் காக உருவாக்கப்பட்ட உயிரித்தொழில்நுட் பத்தில் செயல்படும் நடமாடும் கழிப்பறை சர்வதேச அளவில் சமூக தாக்கத்திற்கான சிறப்பு பரிசை வென்றது.
ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப் பரிசாகவும் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தொழில் தொடங்குவதற்கான பொருட்களையும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 76 ஆயிரம் பரிசாக பெற்ற மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கட்டடவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஹரி பாலன், கோகுல், ஹரிஷ் நடராஜ், பஹும் அகமது மற்றும் திவ்யபாரதி ஆகியோர் அடங்கிய பயோனியர் குழுவினரை கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதன்மை செயலர் முனைவர் ஏ.எம்.நடராஜன், கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.அகிலா மற்றும் கட்டடவியல் துறை தலைவர் முனைவர் அனுஷா ஆகியோர் பாராட்டினர்.