கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 28 சரவணம்பட்டி விமல்ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டபோது எடுத்தபடம்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா முன்னாள் பேரூராட்சித்தலைவர் பையா கிருஷ்ணன், முன்னாள் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.



