கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவர் மோ.ஷர்மிளா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக பணி யாற்றி வந்த விமல்ராஜ் அண் மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவர் மோ. ஷர்மிளா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



