கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக ராஜ கோபால் சுங்கரா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
கோவை மாநகராட்சி ஆணய ராக குமாரவேல் பாண்டியன் பணியாற்றி வந்தார். அவர் இடமடாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக ராஜகோபால் சுங்கராவை தமிழக அரசு நிய மித்தது.
இதனை தொடர்ந்து இன்று கோவை மாநகராட்சி அலுவலகத் திற்கு வந்த ராஜகோபால் சுங்கரா கோப்புகளில் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: கோவை மாநகராட்சி தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். இங்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னுரிமை அளித்து தக்க நடவடிக்கைகளை எடுப்பேன். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்ற வேண்டும்.
அடுத்ததாக பொதுசேவை யில் கவனம் செலுத்துவேன். சுகாதாரம், தெருவிளக்குகள், சாலை வசதி போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். மூன்றாவதாக மக்கள் குறை தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். சென்னை மாநக ராட்சியை டுவிட்டர், பேஸ்புக் போன்றவை மூலம் தொடர்பு கொள்ள முடியும். அந்த திட்டத்தை கோவையிலும் செயல்படுத்த பரிசீலனை செய்யப்படும். நேரிலும் என்னை சந்தித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு புதிய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.