கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி மதியம் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்கச் சென்றுள்ளார். தற்செயலாக அவர், பல் துலக்கும் பிரஸை விழுங்கி விட்டார்.
சுதாரித்துக் கொண்ட அவர், பிரஸின் பின் முனையை பிடித்து வெளியே இழுக்க முயன்றுள்ளார். ஆனால் முடியாமல், பிரஸ் முழுவதை¬யும் விழுங்கி விட்டார்.
இதையறிந்த அவரது தாயார் உடனடி யாக கோவை காந்திபுரம் ((ELCE) எல்சி மருத்துவமனையில் சேர்த்தார்.
சிறுமியை மருத்துவமனையின் தலைமை லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரும், இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபிஸ்டுமான டாக்டர் பி.எஸ்.ராஜன் பரிசோதனையில் உணவுக்குழாயின் ஆழமான பகுதியில் பிரஸ் சிக்கி இருந்தது தெரியவந்தது.
எண்டோஸ்கோபி மூலம் அந்த பிரஸை சில மணி நேரத்தில் டாக்டர் பி.எஸ்.ராஜன் தலைமையில் மருத்துவர்கள் வி.கந்தசாமி, கார்த்திக், செந்தில்நாதன், டாக்டர் வித்யா ராஜன் ஆகியோர் அகற்றி சிறுமியை வெற்றிகரமாக காப்பாற்றினர்.
இது குறித்து டாக்டர் பி.எஸ்.ராஜன் கூறுகையில் சிறுமி பிரஸை விழுங்கியதாக சொன்னதை முதலில் தான் நம்பவில்லை.
பரிசோதனையில் அது உண்மையானது. இது போல் நடப்பது மிக அரிதானது, என்றார்.