கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தராபுரம் அடுத்த காமராஜர் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள 100 குடும்பங்களுக்கு தலா 5கிலோ அரசி வழங்கப்பட்டது.
இது குறித்து உணவு உறுதி திட்ட பொறுப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்குமார் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தலின்படியும், மாநில, பொறுப்பாளர்களான விஜயராகவன், அப்துல் வகாப் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களான மதுக்கரை ஆனந்தன், ஈஸ்வான் மற்றும் பன்னீர் ஆகியோர் ஒத்துழைப்புடனும், கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி சாலையோர மக்களுக் கும், ‘ஆதரவற்றோருக்கும் உணவு உறுதி திட்டம்‘ என்ற திட்டத்தை உருவாக்கி, 13 நாட்கள் மதிய உணவு கொடுத்ததின் மூலம், இது வரை 1300 ஆதறவற்ற மற்றும் உணவு தேவையுள்ள அனைவரும் பயன் பெற்றுள்ளனர்.
மேலும் இத்திட்டத்தின் அடிப்ப டையில் உணவு பொருட்கள் உதவிகள் இது வரை 500 குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதி 95 வது வார்டு மற்றும் மதுக்கரை அறிவொளி நகர் வார்டு 1 ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள், பால், ரொட்டி மற்றும் கபசுர குடிநீர் போன்றவற்றை தொகுதி பொறுப்பாளர்களான ராமகிருஷ்ணன், உமா ஜெகதீஷ், சேக் அப்துல்லா, செல்வகுமார், கிரண் சீனிவாசன் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்களான கார்த்திக் ராஜா அகமது ஆசிக் சரவணன், ரங்கநாதன், சுபாஷ், சன்வர், மரியசெல்வ ஸ்டாலின், முத்துக்குமார், சித்திரைசெல்வன், லாவண்யா ஆகியோர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
இக்கட்டான காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சி என்றும் மக்களுடன் உறுதியாக நிற் கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.