fbpx
Homeபிற செய்திகள்கோவையில் எய்ம்ஸ்: முதல்வர் கோரிக்கைக்கு எம்.பி வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ்: முதல்வர் கோரிக்கைக்கு எம்.பி வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. மருத்துவ கேந்திரமான மாவட்டமாகவும் கோவை மாவட்டம் திகழ் கிறது. இங்கு கோவை மட்டு மல்லாது திருப் பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடி அவர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக் கைகள் குறித்த பட்டி யலை அளித்து வலியுறுத்தியுள்ளார்.

இதில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலும் முக்கியமானது.
கொரோனா மூன்றாவது அலைவரும் அது குழந்தைகளை பாதிக்கும் என்கிற மருத் துவத்துறையினரின் எச்சரிக்கையை உள்வாங் கிக்கொண்டு தற்போது இருந்தே இதற்கான மருத் துவ கட்டமைப்பை உரு வாக்கும் முனைப்பில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பது அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒன்று என்பது அரசியல் எதிரிகள்கூட மறுக்க இயலாத ஒன்றாகும். அந்தவகையில் திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் இதற்கான நடைமுறைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது மகிழ்வை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சரிடம் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச் சருக்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img