fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

கோவையில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, கலாம் மக்கள் அறக்கட்டளை, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி நேரு நகர் லயன்ஸ் சங்கம், பைரா இணைந்து, கோவை ஆர்.எஸ்.புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் அப்துல்கலாம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது.

வாழ்வில் முன்னேற வாசிப்பு திறன் அவசியம் என்பதை மாணவிகளிடையே வலியுறுத்தும் விதமாக மாற்றத்தை நோக்கி படிப்போம் உயர்வோம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரும், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி வட்டார தலைவருமான செந்தில் குமார் தலைமை வகித்தார்.

பள்ளித் தலைமையா சிரியர் ரங்கநாதன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட ஆளுநர் ராம் குமார் கலந்து கொண்டார்.

அப்துல்கலாம் குறித்த சிறப்பு தகவல்களை வழங்கிய மாணவிகளுக்கு கலாம் உருவப்படத்தை மாவட்ட ஆளுநர் பரிசாக வழங்கினார்.

அப்துல் கலாமின் வரலாறு அவர் குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய சிறப்பு கட்டுரை பிரசுரத்தை வெளியிட்டு பேசிய மாவட்ட ஆளுநர் ராம்குமார், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு மாணவ, மாணவியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளியில் பயி லும் போதே மாணவ, மாணவிகள் வாசிப்புத் திறனை வளர்த்து கொள்வதால் எந்தவிதமான தேர்வுகளிலும் வெற்றியை எளிதாக பெற முடியும் என்றார்.

மாநகராட்சி பள்ளிகளின் நோடல் அதிகாரி சதீஷ்குமார், ஜெகதீஷ்குமார், லயன்ஸ் சங்க அமைச்சரவை செயலாளர் ராஜ் மோகன், பொருளாளர்கள் சுப்ரமணியம், கனகராஜ், நேரு நகர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் லோகநாதன், மோகன்ராஜ், மாவட்ட விருதுகள் தலைவர் வில்சன் தாமஸ், மண்டல தலைவர் மணிவண்ணன், சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கர்ணன், தேவானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவிகள் அனை வருக்கும் அப்துல் கலாமின் சிறப்பு கட்டுரை மற்றும் அவர் உருவப் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img