fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரணத்துக்காக ஆன்லைனில் யோகா வகுப்பெடுக்கும் கோவை யோகா உலக சாம்பியன்கள்

கொரோனா நிவாரணத்துக்காக ஆன்லைனில் யோகா வகுப்பெடுக்கும் கோவை யோகா உலக சாம்பியன்கள்

உலக சாதனை படைத்த பள்ளி சிறுமி, தங்கையுடன் இணைந்து ஆன் லைன் வகுப்பெடுத்து கொரோனா நிவாரண நிதி திரட்டுகிறார்.

கோவை சுந்தராபுரம் சாரதா மில் அக்சயா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அசோக். இவரின் மகள்கள் அக்சயா, அக்சித்தா. அக்சயா 10 ஆம் வகுப்பு படிக்கின்றார். அக்சித்தா 6 வகுப்பு படிக்கின்றார்.

அக்சயா ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே யோகா கற்றுக்கொள்ள தொடங்கி 70க்கு மேற்பட்ட ஆசனங்களை கற்று தேர்ந்திருக்கின்றார். அவரது தங்கையான அக்சித்தாவும் சிறு வயது முதலே யோக கலை கற்றுக்கொண்டு 40க்கும் மேற்பட்ட ஆசனங்களை கற்று தேர்ந்திருக்கின்றார்.

உலக அளவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த உலக அளவிலான யோகா போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெற்றிகளை குவித்திருக்கின்ற சிறுமிகள் யோகா கலையில் கைதேர்ந்தவர்கள்.

அக்சயாவின் யோகா கலை திறனை அறிந்து அவருக்கு யோகா கலையில் உலக சாதனை விருது தந்தும் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றார்.
கொரோனா பேரிடரில் வீட்டில் முடங்கிய சிறுமிகள் கொரோனா நிவாரண நிதிக்காக ஆன் லைன் வகுப்பெடுக்க முடிவு செய்தனர்.

கொரோனா நிவாரண நிதி திரட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த பலன் இதென்றால் அது மிகையாகாது. வீட்டில் பொது ஊரடங்கில் மன உளைச்சலுடனும் வெளியில் உடற்பயிற்சிக்கு செல்லாமலிருப்போருக்கும் உதவுகின்ற வகையில் யோகா உடல் மன உறுதிக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சிறுமிகள் காலை 6:30 முதல் 7:30 மணி வரை வாட்சப்பில் இணைய வழி பயிற்சிக்கான பங்கேற்பு ஐடியினை முன்னதாகவே தருகின்றன. வகுப்புகள் ஆரம்பித்தவுடன் யோகா கலையினை உலக சாம்பியன்களான சகோதரிகள் கற்று தருகின்றனர்.

இந்த வகுப்புக்கு சேலம் சென்னை கோவை நகரங்களிலிருந்து பங்கேற்று வகுப்புகள் நடந்து வருகின்றன. வகுப்புகளுக்கு பயிற்சி மேற்கொள்கின்ற நபர்கள் தருகின்ற தொகையினை யோகா சிறுமிகள் சேர்த்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து வகுப்பில் சேர்க்கப்படுகின்ற கட்டண தொகையை யோகா தினத்தில் கொரோனா நிவாரணத்துக்காக தருகின்றனர். பள்ளி சிறுமிகள் தாங்கள் கற்றுக்கொண்ட யோகா கலையை சமூக சேவைக்காக பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.

படிக்க வேண்டும்

spot_img