fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமையடைய சைக்கிள் பேரணி

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமையடைய சைக்கிள் பேரணி

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமையடையவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் 50 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கோவையில் இன்று நடைபெற்றது.

நேரு கல்வி குழுமம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோவைப்புதூர் சார்பில் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமையடையவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த பேரணியானது கோவைபுதூர் மைதானத்தில் துவங்கியது.

இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுண்டக்கா முத்தூர், பேரூர், பச்சாபாளையம், தொண் டாமுத்தூர், ஆலாந்துறை, நல்லூர் வயல், இக்கரை போளூவாம் பட்டி வழியாக சிறுவாணி வந்து மீண்டும் கோவைப்புதூரை வந்தடைந்தனர்.

50 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பேரணியை கோவை பீரங்கி படை பிரிவின் கர்னல் சந்திர சேகர் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ராஜசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும் விழாவில் ரோட்டரி மாவட்ட இயக்குனர் எம்பிஹெச்எப் குமரேசன், உதவி ஆளுநர்கள் பாஸ்கரன் மற்றும் ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை பெடலர்ஸ் அமைப்பின் செயலாளர் விக்னேஷ் மற்றும் பெடலர்ஸ் உறுப்பினர்கள் செய்து இருந்தார்க

படிக்க வேண்டும்

spot_img