கே.எம்.சி.ஹெச். மருத் துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறை சார்பாக நுரையீரல் சம்மந்தமான (ரிஜிட் பிராங்கோஸ்கோபி) தொடர்பான இரு நாள் செயல்திறன் பயிற்சி கருத் தரங்கு கேஎம்சிஹெச் வளாகத்தில் இரு நாட்கள் நடைபெற்றன.
இதில் இத்தாலி நாட்டில் இருந்து இரு சர்வதேச வல்லுனர் கள் மற்றும் இந்தியா முழுவ திலும் இருந்து 10-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இத்துறையில் தங்களது அறிவுத்திறனையும் மருத்துவ நுணுக்கங்களை யும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இவர்களுடன் கே.எம். சி.ஹெச். நுரையீரல் சிகிச்சை துறை குழுவி னர் டாக்டர் எஸ். சாந்த குமார், டாக்டர் ஜே. வேணுகோபால், டாக்டர் தீபக் டி. எச், டாக்டர் ஆர்எம்.பிஎல். ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
மூச்சுக்குழாய் குறித்து பயிற்சி பெறுவதற்காக இளம் நுரையீரல் மருத் துவர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இரு ந்து கலந்து கொண் டனர்.
நுரையீரல் மருத்துவத் தில் இண்டர்வென்ஷனல் பல்மனாலஜி என்பது புதிய கண்டுபிடிப்புகள், அதிநவீன மருத்துவ நுட் பங்களுடன் மிகவேக மாக வளர்ந்து வருகிறது.
பிராங்கோஸ்கோபி என் பது காமிரா பொருத்திய ஒரு மெல்லிய டியூபை செலுத்தி நுரையீரல் உட் புறத்தை நன்கு பார்க்க உதவும் எண்டோஸ்கோபி முறை ஆகும்.
இதன் மூலம் நுரையீரல் புற்று நோய், காசநோய், நிமே £னியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் நோய்களை நன்கு ஆராய்ந்து அவற் றுக்கான சிகிச் சைகளை மேற் கொள்ள முடியும்.
மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் சிகிச்சை துறையில் ஏற்பட்டு வரும் அதிநவீன முன்« னற்றங்கள், நவீன சிகிச்சை முறைகள், நுட்பங்கள் குறித்து இத்துறை மரு த்துவர்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதேபயிற்சி பட்டறையின் நோ க்கமாகும். நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து கேஎம்சி ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசி யதாவது:
கடந்த 30 ஆண்டு களாக சர்வதேச தரத்திற்கு இணையாக கேஎம்சிஹெச். சேவை அளித்து வருகிறது.
எண்டோபிரிங்கியல் அல்ட்ராசவுண்ட் (ஈபஸ்), ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, கிரியோ அப லேசன் முதலான பல்வேறு மருத்துவ வசதிகளை தென் தமிழகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய முன்னோடி மருத்துவ மனையாக கேஎம்சிஹெச் திகழ்கிறது.
இதுபோன்ற சர்வதேச அளவிலான மா நாடு மற்றும் செயற்திறன் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த கேஎம்சிஹெச் நுரையீரல் சிகிச்சை துறை குழுவினருக்கு பாராட் டுகள் என்றார்.