செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி, அப்பாயி செட்டியார் தெரு, சென்டெக்ஸில் சென்டெக்ஸ் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க செயல்பாடுகள் குறித்து, சங்க மேலாளர்களுடனான அறிமுகம் மற்றும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் உதவி இயக்குநர்(கைத்தறி மற்றும் துணிநூல்துறை) சரவணன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் காயத்திரி இளங்கோ உட்பட பலர் உள்ளனர்.