fbpx
Homeபிற செய்திகள்கூடலூர் பேரூராட்சியில் முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

கூடலூர் பேரூராட்சியில் முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு செயல் அலுவலர் என்.சுரேஷ்குமார், பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான கே.குருந்தாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி களின் உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்ட த்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்கள் என 120 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் வீரபாண்டி பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் கே.வி.என் ஜெயராமன், கூடலூர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, நாகராஜ், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img