கோவை மாவட்டம் மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் பில்லூர் அபிவிருத்தி திட்டம்&மிமிமி, ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் 178 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் நடைபெற்றவருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக், இராமச்சந்திரன், துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) அரசு மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உள்ளனர்.