fbpx
Homeபிற செய்திகள்கீழே விழாமல் இருக்க மூங்கில் முட்டு: 3 ஆண்டாக பழுதான நிலையில் மின்கம்பம் உடனடி மாற்றம்...

கீழே விழாமல் இருக்க மூங்கில் முட்டு: 3 ஆண்டாக பழுதான நிலையில் மின்கம்பம் உடனடி மாற்றம் அமைச்சருக்கு பாராட்டு

கரூர் பெரியகுளத்துப் பாளையத்தில் மூன்றாண்டு களுக்கும் மேலாக சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பத்திற்கு மூங்கில் மரத்தைக் கொண்டு முட்டுக் கொடுத்து வந்த நிலையில் உடனடியாகமாற்றித் தந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் தேவைப்படும் உதவிகளுக்கு எனக்கு போன் செய்தால் போதும் நிவர்த்தி செய்து தருவேன் என்ற வாக்குறுதியினை அப்போதைய திமுக வேட்பாளரும் தற்போதைய மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

அதன்படி முதல் போனே மூத்த பத்திரிக்கையாளருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கொரோனா தொற்றினை போன் மூலம் கேள்விப்பட்ட உடனேயே மருத்துவமனையில் சேர்ப்பதற்கு உதவி செய்தார்.

அதேபோல வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குருக்களை கொரோனா சிகிச்சைக்கு கோவை மருத்துவமனையில் உடனடியாக சேர்ப்பதற்கும் உதவி செய்தார். போன் செய்தால் போதும் வீடு தேடி உணவு கொடுத்து உதவ கரூர் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் மூன்று நேரமும் தளபதி கிச்சன் செயல்படுகிறது.

சமீபத்தில் அரிசி பை ஒன்றும், ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கியும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.

சமீபத்தில் பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்த விஜி பாலகிருஷ்ணன் என்ற பெண் ஒருவர் எங்களது தெருவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மின்கம்பம் சாய்ந்து இருக்கிறது.

அது விரைவில் கீழே விழுவதற்குள்ளாக சரி செய்து தருமாறும் அந்த மின் கம்பத்திற்கு மூங்கில் மரத்தை கொண்டு முட்டுக் கொடுத்துள்ளோம்.

நீங்கள் உடனடியாக மின்கம்பத்தை சரி செய்து தர வேண்டும் என்று போன் மூலம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்ட மின்சாரத் துறை அமைச்சரும் உடனடியாக சீர் செய்து தருமாறு மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

கரூர் வடக்கு மின் பகிர்மான உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், வெங்கமேடு இளநிலை பொறியாளர் ராஜமாணிக்கம் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த மின்கம்பத்தை போன் செய்த ஒரே நாளில் மாற்றித்தந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மூன்றாண்டுகளுக்கு மேலாக முட்டுக் கொடுத்து வந்த மரமும் அகற்றப்பட்டது.

சாய்ந்து கொண்டிருந்த மின்கம்பமும் மாற்றப்பட்டுள்ளது என்ப தை அப்பகுதி மக்கள் வேடிக்கையாக வந்து பார்த்து சென்றது மட்டுமல்லாமல் மின்சாரத் துறை அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img