கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், போலுப்பள்ளி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் 2021 அக்டோபர் மாத இறுதிக்குள் விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் மருத்துவகல்லூரி முதல்வர் அசோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் (மருத்துவ கட்டுமானம்) மாகவிஷ்ணு, முரளி உட்பட பலர் உள்ளனர்.